டெல்லியில் மீண்டும் காரில் பெண் கற்பழிப்பு: கால் டாக்சி டிரைவர் கைது!!

Read Time:4 Minute, 13 Second

0314ebdc-48a4-49a2-b973-1775c32fdff5_S_secvpfடெல்லியை சேர்ந்த 27 வயது இளம்பெண் குர்கான் நகரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 7 மணிக்கு பணி முடிந்ததும் நண்பர்களுடன் ஓட்டலுக்கு சென்று விருந்து சாப்பிட்டார். பின்னர் அவரை நண்பர்கள் டெல்லி வசந்த விகார் வரை காரில் கொண்டு வந்து இறக்கி விட்டனர்.

அப்போது இரவு 9.30 மணி இருக்கும். அங்கிருந்து வீட்டுக்கு செல்ல வேறொரு வாடகை காரில் ஏறினார். பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

சிறிது தூரம் சென்றதும் டிரைவர் காரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒதுக்குப்புறமாக நிறுத்தினார். அந்த பெண் ஏன் காரை இங்கு நிறுத்துகிறாய் என்று கேட்டார். அதற்குள் டிரைவர் பின் இருக்கையில் தாவி குதித்து இறங்கினார். கையில் இரும்பு கம்பி வைத்திருந்தார். அதை காட்டி கொன்று விடுவதாக மிரட்டினார்.

பின்னர் காரிலேயே அப்பெண்ணை கற்பழித்தார். நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு காரிலேயே மீண்டும் அழைத்து சென்று வீட்டின் அருகில் இறக்கி விட்டு தப்பி சென்றுவிட்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் டெல்லி சாராய் ரோகில்லா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். முன்னதாக அந்த பெண் காரில் கற்பழிக்கப்பட்ட பின் டிரைவருக்கு தெரியாமல் அவரையும், கார் நம்பர் பிளேட்டையும் செல்போனில் படம் பிடித்தார். அதையும் போலீசில் ஒப்படைத்தார்.

இதை வைத்து போலீசார் விசாரித்தபோது உபேர் என்ற டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கார் என்றும் கார் டிரைவர் பெயர் ஷிவ் குமார் யாதவ் என்றும் தெரியவந்தது. 32 வயதான அவர் காரை வழியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

கார் டிரைவரிடம் இருந்த ஜி.பி.எஸ். தகவல் தொடர்பு கருவியும், செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் கார் மதுரா அருகே அனாதையாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கார் டிரைவரை பிடிக்க டெல்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மதுரா பகுதியில் ஒளிந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர். டிராவல்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட கார் டிரைவரை உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கார் டிரைவர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டார். இதில் அவர் இறந்தார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கைதானவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது மீண்டும் கற்பழிப்பு சம்பவம் நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய்க்காக காத்திருக்கும் உதயநிதி!!
Next post நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணையும் ஆர்.ஜே.பாலாஜி!!