தண்ணீர் பிடிப்பதில் தகராறு: வாலிபரின் காதை கடித்து துப்பிய கும்பல்!!
Read Time:1 Minute, 13 Second
பழனி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் 1–வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கோதைராஜ். இவரது மனைவி சாந்தி. இதே பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது சிவக்குமார் மனைவிக்கும், சாந்திக்கும் தகராறு ஏற்பட்டது.
இருவரும் நடுரோட்டில் சண்டை போட்டு கொண்டனர். சாந்திக்கு ஆதரவாக அவரது தம்பி முத்தையன்(30) சென்று அவர்களை விலக்கி விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார், அவரது தந்தை ஜெயராமன், தம்பி இளங்கோ ஆகியோர் முத்தையனை சரமாரியாக தாக்கி அவரது காதை கடித்து துப்பினர். இதில் படுகாயம் அடைந்த முத்தையன் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
Average Rating