மஹிந்த, மைத்திரிக்கு எதிர்ப்பு: 19 வேட்பு மனுக்களும் ஏற்பு!!
ஜனாதிபதித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் ஆட்சேபம் தெரிவிக்கும் காலத்தில் இரண்டு பிரதான வேட்பாளர்களின் வேட்பு மனுக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேட்பு மனுவிற்கு கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நா.அமரகோனும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
எனினும் 1981ம் ஆண்டு 15ம் இலக்க சரத்தின்படி ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரை தெரிவு செய்யும் வேட்பு மனு விடயங்களில் காணப்படும் அதிகாரத்திற்கு அமைய தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறித்த ஆட்சேபனைகளை நிராகரித்துள்ளார்.
தேர்தல் சட்டத்திட்டங்களுக்கு புறம்பானதாக அந்த ஆட்சேபனைகள் காணப்பட்டதால் அவற்றை நிராகரிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வேட்பு மனு தாக்கல் செய்த 19 வேட்பாளர்களும் சரியான முறையில் விண்ணப்பித்துள்ளதால் அவற்றை ஏற்றுக் கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
Average Rating