ஜயந்த கெட்டகொட அரசாங்கத்துடன் இணைகிறார்!!

Read Time:1 Minute, 22 Second

838646654jayanthaஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக கட்சியின் பிரதித் தலைவருமாகிய ஜயந்த கெட்டகொட இன்று மாலை ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியின் பிரதித் தலைவராக உள்ள ஜயந்த கெட்டகொட கடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பாராளுமன்றில் இருந்த சரத் பொன்சேகா வெள்ளைக் கொடி வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றதால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜயந்த கெட்டகொட எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதோடு இன்று மாலை தனது பகிரங்க அறிவிப்பையும் அவர் விடுக்கவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு!!
Next post ஒருவரை கொன்ற குற்றத்திற்கு இருவருக்கு மரண தண்டனை!!