திருச்சியில் கர்ப்பிணியான 11–ம் வகுப்பு மாணவி கலெக்டரிடம் மனு!!

Read Time:2 Minute, 2 Second

54102396-3094-4de0-88da-d08c0ae5b98e_S_secvpfதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி (வயது17 பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர் இன்று தனது உறவினர்களுடன் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:–

நான் திருச்சி கே.கே. நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அஜித்குமார் என்பவர் கடந்த 19.6.2014 அன்று என்னை கடத்தி சென்று பூலான்சேரி கிராமத்தில் அவரது உறவினர் வீட்டில் தங்க வைத்தார். இதற்கு அவரது தாய், தந்தை உள்பட 10 பேர் உடந்தையாக இருந்தனர்.

பின்னர் 5 நாட்கள் கழித்து என்னை அவர் விடுவித்தார். இதை தொடர்ந்து நான் பள்ளிக்கு சென்று வந்தேன். இந்த நிலையில் எனக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது நான் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அஜித்குமாருடன் சேர்த்து வைக்கும் படி மண்ணச்ச நல்லூர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீங்கள் தலையிட்டு அஜித்குமார் உள்பட 10 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே இதயம்…உடல் வேறு! ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் (வீடியோ இணைப்பு)!!
Next post பள்ளி மாணவியை கொன்றவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்: தாய் கண்ணீர் பேட்டி!!