சென்னை புழலில் மாயமான போலீஸ்காரரின் மனைவி மும்பையில் மீட்பு!!

Read Time:1 Minute, 35 Second

7d587622-f63e-494d-bc23-ddde75f500a6_S_secvpfசென்னையை அடுத்த புழல் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவர், ஏழுகிணறு போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (28). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் கடைக்கு சென்ற ரேவதி, அதன்பிறகு மாயமாகி விட்டார். எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதுபற்றி புழல் போலீசில் சரவணன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்கு பதிவு செய்து ரேவதியை தேடி வந்தார்.

இந்த நிலையில் மாயமான ரேவதி, மும்பையில் இருப்பது தெரியவந்தது. போலீசார் மும்பையில் இருந்து அவரை மீட்டு நேற்று புழல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனம் உடைந்து மும்பைக்கு சென்றுவிட்டதாக கூறினார். மேலும் அவர், கணவருடன் செல்ல மறுத்து தனது தாயாருடன் காட்பாடிக்கு செல்ல விரும்புவதாகவும் கூறினார். அதன்பேரில் ரேவதியை அவரது தாயாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 22 வயது பெண்ணை மணந்த 17 வயது வாலிபர்: ஓமலூர் போலீசில் தஞ்சம்!!
Next post ரிஷாத் தரப்பு இன்னும் முடிவெடுக்கவில்லையாம்: ஜனாதிபதி செயலக செய்தி பொய்யா?