முற்போக்கு தமிழ் தேசிய கட்சி மஹிந்தவுக்கு ஆதரவு!!

Read Time:2 Minute, 32 Second

2136776161download20ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதென முற்போக்கு தமிழ் தேசிய கட்சி முடிவு செய்துள்ளதென அக்கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி ஜனாதிபதி பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவுடன் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம்.

அந்த கலந்துரையாடலின் போது, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக தங்களுடன் இப்போதைக்கு பேச வேண்டாம். தேர்தல் முடிந்த பின்னர் பேசுவோம். தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தார்.

அந்த சூழ்நிலையில், அவர்களுக்கு ஆதரவு வழங்கமுடியாது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் பேசிய போது, 2015 ஆம் ஆண்டு வெற்றி பெறுவார் அதன்போது, எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடகிழக்கு மாகாணங்களில் இருந்து சுவீகரிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைத்தல், தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில், சரியான சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்துதல், மற்றும் வட மாகாண சபைக்கு விசேட அதிகாரங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அதனடிப்படையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழு தலதா மாளிகையில் வழிபாடு!!
Next post மஹிந்தவை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம், கறுப்புக்கொடி, உருவ பொம்மை எரிப்பு!!