ராயபுரத்தில் கழுத்தை அறுத்து குழந்தை கொலை: குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பரிதாபம்!!
Read Time:1 Minute, 19 Second
ராயபுரம் வேலாயுதம் தெருவில் உள்ள குப்பை தொட்டியில் இன்று காலை பச்சிளம் ஆண் குழந்தை பிணம் கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெகடர் மோகன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராம் மற்றும் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் கழுத்து சிறிதளவு அறுக்கப்பட்டு உடல் முழுவதும் ரத்தம் வடிந்து இருந்தது. குழந்தையின் பெற்றோர் யார் என்று தெரியவில்லை.
தகாத உறவில் பிறந்ததால் குழந்தையின் கழுத்தை அறுத்து குப்பை தொட்டியில் வீசினார்களா? அல்லது முன் விரோதத்தில் கடத்தி கொன்றார்களா? நரபலியா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
குழந்தையின் உடல் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பப்பட்டு உள்ளது.
Average Rating