அதிகாலையில் சாவு செய்தி சொல்வதா?: கணவன்–மனைவி உள்பட 6 பேருக்கு கத்திக்குத்து!!

Read Time:1 Minute, 37 Second

aa03977c-af9d-47dd-8bfb-f5a624285392_S_secvpfஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது நண்பர் லோகநாதன் கடந்த 6–ந் தேதி ஏற்பட்ட விபத்தில் பலியானார்.

இதுபற்றி தெரிவிப்பதற்காக பிரபாகரன் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு நண்பரான சேகர் வீட்டுக்கு அதிகாலையில் சென்றார்.

இதனால் சேகரின் பெற்றோருக்கும் பிரபாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது அதிகாலையில் எழுப்பி சாவு செய்தி சொல்வதா? என்று கண்டித்தனர்.

இந்த நிலையில் சேகரின் தந்தை தயாளன், தாய் புஷ்பாவதி உறவினர் கிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் பிரபாகரன் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் பிரபாகரனின் பெற்றோர் கஜேந்திரன்–ராணி ஆகியோர் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் கத்தியால் குத்திக் கொண்டனர்.

இதில் தயாளன், அவரது மனைவி புஷ்பாவதி, பிரபாகரன் கஜேந்திரன், ராணி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பென்னாலூர் பேட்டை சப்–இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருமையை போக்கி சிகப்பழகு தரும் டிப்ஸ்…!!
Next post காதல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசில் சிக்க வைத்த பள்ளி மாணவி!!