ஊழல், மோசடி பற்றி ஆராய ஆணைக்குழு நியமிக்கப்படும் – மைத்திரி!!

Read Time:1 Minute, 40 Second

569821166985108055maithripala-siri2எதிர்வரும் தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்பு ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்கு உரிய அதிகாரங்களைக் கொண்ட ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை மாலை கண்டியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர் கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள பிற கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

அங்கு உரையாற்றிய எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தற்போது அரச துறையில் ஊழல் மோசடிகள் அதிகரித்துள்ளதாக கூறினார்.

அரசியல் தலையீடுகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்கொண்டு செல்லப்படுமென்றும் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலூர் அருகே போலி பெண் டாக்டர் கைது!!
Next post வேன் – லொறி மோதி குழந்தை உள்ளிட்ட இருவர் பலி 11 பேர் படுகயாம்!!