வேன் – லொறி மோதி குழந்தை உள்ளிட்ட இருவர் பலி 11 பேர் படுகயாம்!!
Read Time:1 Minute, 9 Second
நிட்டம்புவ – ரதாவடுவன்ன பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன வித்தில் குழந்தை ஒன்று உள்ளிட்ட இருவர் உயிரிழந்து 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த 8 பேர் கேகாலை வைத்தியசாலையிலும் 5 பேர் வரக்காபொல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவரே உயிரிழந்துள்ளனர்.
ஒன்றரை வயது குழந்தையும் 50 வயது நபருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தை அடுத்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கேகாலை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
Average Rating