முடிந்தால் திஸ்ஸவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டவும்!!

Read Time:1 Minute, 26 Second

1401658239unpதிஸ்ஸ அத்தநாயக்கவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மைத்திரி குணரத்ன அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க தனது குண்டசாலை தொகுதியில் கூட தோல்வியுற்றதாகவும் ஐதேகவுக்கு அத் தொகுதியில் இரண்டாம் இடமே கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே திஸ்ஸ அத்தநாயக்க ஒரு அரசியல் தோல்வியாளர் என மைத்திரி குணரத்ன கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிரால் லக்திலக, ஐதேக பொதுச் செயலாளர் பதவிக்கு ரஞ்சித் மத்துமபண்டார அல்லது இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட பகுதி ரயில் சேவை ஸ்தம்பிதம்: இரண்டு யானைகள் மோதி பலி!!
Next post இந்திய கப்பல் இலங்கையில்!!