சப்-இன்ஸ்பெக்டரின் 7 வயது பேரனை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை!!
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் 7 வயது சிறுவன் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள முகந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவரது 7 வயது பேரன் குல்வன்ஷ். தனது வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று காணாமல் போனான்.
இது தொடர்பாக உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் தேடிவந்த நிலையில், இதே கிராமத்தில் உள்ள கரும்புத்தோட்டம் ஒன்றில் கழுத்தை அறுத்து, கொல்லப்பட்டு, நிர்வாண நிலையில் குல்வன்ஷ் நேற்று பிணமாக கிடந்தான்.
பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த சிறுவன் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
Average Rating