கற்பழிப்பு வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவருக்கு 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல்!!
சர்வதேச வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனம் உபேர். டெல்லியில் இந்த நிறுவனத்தின் வாடகை காரில் கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்த 27 வயதான இளம்பெண் ஒருவர், கார் டிரைவரால் கற்பழிக்கப்பட்டார்.
அவரது புகாரின் பேரில், கடந்த 7-ந்தேதி உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் அந்த கார் டிரைவர் சிவகுமார் யாதவ் (வயது 32) கைது செய்யப்பட்டார். பின்னர் கார் டிரைவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். 11-ந்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
3-நாள் காவல் முடிந்து இன்று அவர் கோர்ட்டில் மீ்ண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி அவரை வரும் 24-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த விவகாரத்திற்குப் பிறகு ஆன்லைன் டாக்சி நிறுவனத்திற்கு பல மாநிலங்கள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating