மலையுச்சியில் செல்பி! பிரம்மாண்ட உயரத்திலிருந்து தடுமாறி விழுந்த வாலிபர் (வீடியோ இணைப்பு)!!

Read Time:1 Minute, 34 Second

selfie_death_002பிரித்தானியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்பி ஆசையால் மலையுச்சியில் இருக்கும் செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் கேம்பிரிஜ் (Cambridge) பல்கலைக்கழகத்தில் பயிலும் கெரீத் ஜோன்ஸ் (Gareth Jones Age-25) என்ற வாலிபர் சாகச விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வமுடையவர்.

அவுஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள மலை ஒன்றிற்கு சென்றிருந்த இவர், சூரிய உதயத்தை பார்க்கும் ஆசையில் தனது நண்பர்களுடன் பாறைகளின் மீது ஏறி நடந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சுமார் 90 அடிக் கொண்ட மலையுச்சியில் இருந்த குன்றின் மீது ஏறி நின்ற அவர் தன்னை செல்பி எடுத்து கொள்ள முயன்றுள்ளார்.

அப்போது திடீரென அவர் கட்டுப்பாட்டை இழந்ததால் கால் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரை தாங்கள் பிரிந்து வேதனைப்படுவதாக சமூக வலைதளங்களில் சில நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகை!!
Next post தாயார், தம்பி, மைத்துனியை வெட்டிக் கொன்ற மனநோயாளி!!