சோலங்காராச்சி, ஹிருணிகா ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல்!!
தன்னை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காராச்சி தெரிவித்துள்ளார்.
தன்னை ஆயுதம் காட்ட அழைத்துச் சென்று அல்லது சூழ்ச்சி செய்து கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஹிருணிகா தங்கைக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் அவர் வீட்டை விட்டு வெளியில் வராது இருப்பதாக அவர் கூறினார்.
எஸ்ரிஎப் என்று கூறி சில தனது ஊருக்கு வந்து சந்திக்குச் சந்தி தன்னையும் வீடையும் பற்றி விசாரித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக சோலங்காராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதுவா நல்லாட்சி, இதுவா ஜனநாயகம்? தாம் மரணத்தை எதிர்கொள்ளத் தயார் என்றும் கொலை செய்யப்பட்டால் அந்தப் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சோலங்காரச்சி தெரிவித்துள்ளார்.
தனக்கு விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் மேல் மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் தெரிவிக்க முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆலோசனையில் 119 அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.
ஆளும் கட்சியில் அங்கம் வகித்த பிரசன்ன சோலங்காராச்சியும் ஹிருணிகாவும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating