மோட்டார் வாகன திணைக்களத்திலும் குண்டுப் புரளியால் பெரும் பரபரப்பு
Read Time:1 Minute, 8 Second
நாரஹேன்பிட்டிய மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து அங்கு நேற்றுமுன் தினம் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் முற்பகல் 10 மணியளவில் குண்டு வைக்கப்பட் டுள்ளதாக அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது. உட னடியாக பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தேடுதல்கள் நடத் தப்பட்டன. ஆயினும் சந்தேகத்திற்கிட மான பொருள்கள் எதுவும் கிடைக்க வில்லை எனத் தகவல்கள் தெரிவிக் கின்றன. இதேவேளை மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்திற்கு அருகில் கையடக் கத் தொலைபேசி ஒன்றின் மூலம் படம்பிடித்த இளைஞர் ஒருவர் பொலீ ஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.