தங்கொட்டுவ துப்பாக்கிச்சூட்டில் தாய், மகன் வைத்தியசாலையில்!!
Read Time:1 Minute, 9 Second
தங்கொட்டுவ – கிராகார பிரதேசத்தில் நேற்று (11) இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர் உழுந்து ஆலை உரிமையாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்திபோது வீட்டு உரிமையாளர் அவர்களை தாக்கியுள்ளார். அதன்போது துப்பாக்கிச்சூடு நடத்திய கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating