ஐ.என்.எஸ். கோதாவரி போர்க்கப்பலில் 24 வயது கப்பற்படை பொறியாளர் தற்கொலை!!
ஐ.என்.எஸ். கோதாவரி போர்கப்பலில் மெக்கானிக்கல் என்ஜினியராகப் பணியாற்றும் 24 வயதான கப்பற்படை அதிகாரி நரோட்டம் சிங் டோமர் நேற்று அதிகாலை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
போர்பந்தர் காவல் துறையினர் அளித்த தகவலின் படி மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் பகுதியைச் சேர்ந்த இவர், கப்பலின் குளிர்சாதன வசதி கொண்ட கட்டுப்பாட்டு அறையில் தூக்கு மாட்டிக் கொண்டதாக போர்பந்தர் காவல்துறை கூறியுள்ளது.
கப்பல் வழக்கமான பயிற்சிக்காக போர்பந்தருக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, தங்களுக்கு டோமரின் மரணம் குறித்து தகவல் வந்ததாகவும், இதையடுத்து இன்று அதிகாலை கப்பலில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்ததாகவும் போர்பந்தரில் உள்ள கிர்டிமந்திர் உதவி காவல் ஆய்வாளர் வகேலா தெரிவித்தார்.
டோமரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஜாம்நகர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் வகேலா கூறியுள்ளார்.
Average Rating