சாயல்குடி அருகே போலி டாக்டர்களாக பணிபுரிந்த கணவன்–மனைவி கைது!!
Read Time:1 Minute, 2 Second
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூரை சேர்ந்தவர் கருணாநிதி (வயது58). இவரது மனைவி சுலோக்சனா (54).
இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக சாயல்குடியில் கிளீனிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் கருணாநிதி 10–ம் வகுப்பு வரையும், சுலோக்சனா பி.யூ.சி. வரையும் படித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகணனுக்கு கிடைத்த தகவலின்பேரில் சாயல்குடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது இருவரும் போலி டாக்டர்கள் என்பது தெரியவந்தது.
கணவன்–மனைவியான இருவரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating