பழனி அருகே திருமணம் ஆனவருடன் ஓடிய கல்லூரி மாணவி!!
பழனி அருகே உள்ள சின்னகலையம்முத்தூரை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகள் நிவேதா(வயது21). பி.எட் படித்து வருகிறார். பழனி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆதித்தா(28). இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஞானசேகரும், ஆதித்தாவின் தந்தையும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி கொள்வார்கள். சில சமயங்களில் ஆதித்தா அவரது தந்தையுடன் ஞானசேகர் வீட்டுக்கு வந்து செல்வார். அப்போது அவருக்கும், நிவேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த விசயம் அரசல் புரசலாக தெரியவரவே நிவேதாவை பெற்றோர்கள் கண்டித்தனர். ஆதித்தாவை தங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்றும் கூறினர். இதனால் கள்ளக்காதலர்கள் ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் தவித்தனர். செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஆதித்தா, நிவேதாவை கடத்தி சென்றுவிட்டார்.
இதுகுறித்து அவரது தந்தை பழனி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
Average Rating