மகளின் காதலை பிரிப்பதாக கூறி தாயிடம் செக்ஸ் அனுபவித்து ரூ.15 லட்சம் பறித்த மந்திரவாதி கைது!!
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது37). இவர் அப்பகுதியில் பில்லிசூனியம், செய்வினை போன்ற மாந்திரீக வேலைகளை செய்து வந்தார். இவரிடம் வத்தலக்குண்டு அருகில் உள்ள முத்துலாபுரத்தை சேர்ந்த பாலாமணி (40) கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மகள் காயத்ரி (22). வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலிப்பதாகவும், அவரை பிரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதற்காக சில மாந்திரீக வேலைகள் செய்ய வேண்டும் என கூறி பாலாமணியிடம் சில லட்சம் ரூபாய்களை வாங்கினார். அதன்பிறகு காயத்ரி தனது காதலனை சந்திக்காமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து மந்திரவாதி வீட்டிற்கு பாலாமணி அடிக்கடி சென்று வந்துள்ளார். அவரிடம் உனது மகளின் காதலை நிரந்தரமாக பிரிக்க வேண்டும் என்றால் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என சொல்லி ரூ.15 லட்சம் வரை பணம் பறித்துள்ளார்.
இதனிடையே கிருஷ்ணமூர்த்திக்கும், பாலாமணிக்கும் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலும் வளர்ந்துகொண்டே இருந்தது. மகள் காயத்ரியை வைத்து பூஜை செய்ய வேண்டும் என மந்திரவாதி சொல்லி அவரையும் தனிமையில் அழைத்துச்சென்றுள்ளார்.
இதனால் பாலாமணிக்கு சந்தேகம் ஏற்பட்டது. தன்னை வசப்படுத்தி உல்லாசமாக இருந்தது போல் தன் மகளையும் வசப்படுத்தி விடுவார் என சந்தேகப்பட்டார்.
இதனால் மகளை அனுப்ப மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி மகளை அனுப்பாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன பாலாமணி போலியாக மந்திரங்கள் செய்து தன்னை ஏமாற்றி பணம் பறித்ததுடன் தனது வாழ்க்கையையும் சீரழித்த கிருஷ்ணமூர்த்தி குறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சப்–இன்ஸ்பெக்டர் காமாட்சிநாதன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த போலி மந்திரவாதி கிருஷ்ணமூர்த்தியை பழனி ரோடு கோழிப்பண்ணை பிரிவு என்ற இடத்தில் வைத்து கைது செய்தனர்.
Average Rating