திருமங்கலத்தில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம்: யோகா மாஸ்டர் கைது!!
Read Time:1 Minute, 9 Second
சென்னையை அடுத்த திருமங்கலம் பாடி குப்பம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 40). தியானம் மற்றும் யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் உள்ள சுதா (6) என்ற சிறுமி தாயுடன் வசித்து வருகிறாள். அவள் அடிக்கடி சுந்தரமூர்த்தி வீட்டிற்கு சென்று வருவாள்.
நேற்றிரவு சுதாவிடம் சுந்தரமூர்த்தி தவறாக நடந்துள்ளார். ஆடையை கழற்றி சில்மிஷம் செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால் அழுத சுதா தனது தாயிடம் நடந்ததை கூறினாள். ஆத்திரம் அடைந்த அவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் முருசேகன் ஆகியோர் விசாரணை நடத்தினார்.
சிறுமியிடம் தவறாக நடந்த சுந்தரமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Average Rating