விபத்தில் கை, கால்களை இழந்த இராணுவ வீரர்!!
Read Time:1 Minute, 25 Second
நேற்று காலை கோகந்தர பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவரின் இரு கால்கள் மற்றும் கையொன்றும் அகற்றப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான நிலையில் பிரதேசமக்களின் உதவியுடன் இவர் காப்பாற்றப்பட்டு, தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்படி காலி – பத்தேகம பகுதியைச் சேர்ந்த குறித்த இராணுவ வீரருக்கு இரு கால்களும் முழங்காலுக்குக் கீழ் அகற்றப்பட்டுள்ளதோடு, கையொன்றும் அகற்றப்பட்டுள்ளது.
மேலும் அவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று ஐவருடன் பயணித்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ – 32 ரக விமானம் கோகந்தர வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating