தேர்தல்களுக்காக விஷேட கண்காணிப்புக் குழு!!

Read Time:1 Minute, 36 Second

262062596Untitled-1எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சட்ட விதிமுறை மீறல் குறித்த முறைப்பாடுகளை முன்வைப்பது தொடர்பில் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவொன்றை அமைக்க சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் காலங்களில் எந்தவொரு தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்தும் மக்களுக்கு முறைப்பாடுகளை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நகரசபை மற்றும் பிரதேசசபைகளில் அகற்றப்படாதுள்ள கட்டவுட் மற்றும் பேனர்கள் தொடர்பிலும் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சட்டத்தரணிகள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் தேர்தல் சட்டங்களை பொலிஸார் உரிய முறையில் மேற்கொள்ளாவிடின் பொலிஸ் மா அதிபரிக்கு எதிராகவும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை அகதிகள் விவகாரம்: இந்திய அரசு விளக்கம்!!
Next post பழனி அருகே திருமணம் ஆனவருடன் ஓடிய கல்லூரி மாணவி!!