உடைந்த போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் கொலை!!
Read Time:1 Minute, 9 Second
கொம்பனிவீதி – விதானகே மாவத்தை பகுதியில் உடைந்த போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 07.00 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த நபர் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பலியாகியுள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்பு – 02, ஸ்டுவட் வீதிப் பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொம்பனிவீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating