வேலைக்காக மத்திய கிழக்குக்குச் சென்ற 85 பேர் நாடுதிரும்பினர்!!
Read Time:57 Second
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்ற இலங்கையர்கள் குழுவொன்று மீண்டும் நாடுதிரும்பியுள்ளனர்.
இன்று காலை 85 தொழிலாளர்கள் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு காரணங்களுக்காக வேலையைப் புறக்கணித்த குழுவினரையே நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி கட்டாரில் பணி புரியச் சென்ற 37 ஆண்கள் சவுதி மற்றும் குவைத்தில் பணி புரிந்து வந்த 48 பேருமே இவ்வாறு நாட்டுக்கு வந்துள்ளனர்.
Average Rating