தாயார், தம்பி, மைத்துனியை வெட்டிக் கொன்ற மனநோயாளி!!
Read Time:1 Minute, 4 Second
உத்தராகாண்ட் மாநிலம், டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள கஜா பகுதியைச் சேர்ந்த 31 வயது மனநோயாளி இன்று தனது தாயார் மீனா(58) தேவியை வாளால் வெட்டிக் கொன்றான்.
காப்பாற்றச் சென்ற தம்பி சுரேந்திரா(27) மற்றும் அவரது மனைவி ஆகியோரையும் அதே வாளால் வெட்டிக் கொன்ற அவன் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று உள்பக்கம் தாளிட்டுக் கொண்டான்.
அவனது கையில் குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு துப்பாக்கி மற்றும் இந்த 3 கொலைகளுக்கும் பயன்படுத்தப்பட்ட வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் உள்ளதால் அவனை பிடிப்பதில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக டெஹ்ரி மாவட்ட தாசில்தார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Average Rating