முஸ்லிம் காங்கிரஸ் இன்றும் தீர்மானிக்கவில்லை!!

Read Time:1 Minute, 23 Second

1741497071Untitled-1எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட கலந்துரையாடலில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

அந்தக்கட்சியின் தலைவர் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கண்டியில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஒருதரப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மற்றைய தரப்பினர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதனால் எந்தவொரு இணக்கப்பாடும் இன்றி இந்த கலந்துரையாடல் முடிவுக்கு வந்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் தினங்களில் தாம் ஆதரவளிக்கப் போகும் வேட்பாளரை அறிவிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டில் நீரில் மூழ்கிய ஏழு இளைஞர்கள் மீட்பு – ஒருவரைக் காணவில்லை!!
Next post மேலும் ஒரு வௌிநாட்டு கண்காணிப்பாளர் இலங்கை வருகை!!