மேலும் ஒரு வௌிநாட்டு கண்காணிப்பாளர் இலங்கை வருகை!!
Read Time:1 Minute, 8 Second
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கண்காணிப்பதற்காக வௌிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதந்து கொண்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இன்று ஒரு வௌிநாட்டு கண்காணிப்பாளர் வந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக தெற்காசிய மற்றும் பொதுநலவாய நாடுகளில் இருந்து 60 கண்காணிப்பாளர்கள் வருகைதரவுள்ளனர்.
கடந்த சில தினங்களாக அவர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating