கட்டுநாயக்க – கொழும்பு சொகுசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!
Read Time:1 Minute, 15 Second
கட்டுநாயக்க – கொழும்பு வீதி அதிசொகுசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று (15) காலை தொடக்கம் வேலை நிறுத்தம் இடம்பெறுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவும் முடிக்கவும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தனியார் பஸ்கள் எவரிவத்த பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே சொகுசு பஸ்களுக்கும் விமான நிலைய வளாகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Average Rating