இபோச பஸ்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களை ஏற்றிச் செல்வது எப்படி? – பெப்ரல்!!
Read Time:1 Minute, 15 Second
தேர்தல் நடவடிக்கைகளுக்கென இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
பாணந்துரை பிரதேசத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு செல்ல 500 பஸ்கள் தயார் நிலையில் உள்ளதென தகவல் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பஸ்கள் தயார் நிலையில் உள்ளமைக்கான காரணத்தை விளக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் சசி வெல்கமவிடம் வினவ நாம் எடுத்த முயற்சி கைகூடவில்லை.
Average Rating