அரியானாவில் மகனை கொன்று வீசி தாயை கற்பழித்த கும்பல்!!

Read Time:2 Minute, 21 Second

7e8b82b8-2746-4fda-998b-6669c5bf037a_S_secvpfஅரியானா மாநிலம் ரிவாரி ரெயில் நிலையத்தில் தனியாக ஒரு இளம் பெண்ணும், மகனும் தவித்துக் கொண்டு இருந்தனர். அப்போது லாரி டிரைவர் முகேஷ் அந்த பெண்ணைச் சந்தித்து ஆதரவாக பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

சில நாட்கள் கழித்து முகேஷ் லாரி ஓட்ட வெளியில் சென்று விட்டார். அப்போது முகேஷின் தம்பி சதீஷ், நண்பர்கள் ஜெய்பால், ஹாவா சிங் ஆகியோர் மது போதையில் அடைக்கலம் தேடி வந்த பெண்ணை கற்பழித்தனர். இதற்கு இடையூறாக இருந்த மகனை அடித்துக் கொன்று பிணத்தை வீசி விட்டனர்.

3 பேரும் உல்லாசம் அனுபவித்த பின்பு ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரிடம் அந்தப் பெண்ணை விலை பேசி விற்பனை செய்து விட்டனர். இதற்கிடையே பெண் விற்கப்பட்ட தகவல் அறிந்து ஊர் தலைவர் போலீசில் புகார் செய்தார்.

உடனே போலீசார் ராஜஸ்தான் வியாபாரியிடம் இருந்து பெண்ணை மீட்டனர். கொன்று வீசப்பட்ட மகனின் பிணமும் மீட்கப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கும்பலால் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே கற்பழிப்பு மற்றும் கொலையில் ஈடுபட்ட கும்பலை அரியானா போலீசார் தீவிரமாக தேடினார்கள். அப்போது கிராமத்தில் பதுங்கி இருந்த சதீஷ், ஹாவாசிங், ஜெய்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கற்பழிப்பு, கொலை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெண்ணை விலைக்கு வாங்கிய வியாபாரி நாங்கிலி மாத்தார், தரகர்கள் சூரஜ்பான், தயாசந்த் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொடர்ந்து நான்காவது வாரம் குப்பைகளை சுத்தம் செய்யும் பப்பரப்பாம் படக்குழு!!
Next post டெல்லியில் சிறுமி கற்பழிப்பு: 3 வாலிபர்களுக்கு 10 ஆண்டு ஜெயில்!!