மீராநந்தனுக்காக 32 மணி நேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார்!!

Read Time:2 Minute, 9 Second

afb53aab-6578-4b7a-a262-15f53d24120e_S_secvpfசரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி வருகிறார். படத்திற்கு சரத்குமார் கதை எழுதுகிறார். கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதி வருகிறார்.

இப்படத்தின் நாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் ஆகியோர் நடிக்கிறார்கள். சமுத்திரகனி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

வித்தியாசமான ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக சரத்குமார் 32 மணி நேரம் தூங்காமல் நடித்து கொடுத்துள்ளார். இதற்கு இப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் மீராநந்தன் தான் காரணம் என்கிறார்கள் படக்குழுவினர்.

ஏனென்றால், சில மாதங்களுக்கு முன்பு மீராநந்தன் துபாயில் ஒரு ரேடியோ ஸ்டேஷனில் வர்ணனையாளராக சேர்ந்து விட்டாராம். அதனால், படப்பிடிப்புக்காக அந்த நிறுவனத்திடம் அனுமதி வாங்கி கிளைமாக்ஸை முடித்து இருக்கிறார்கள். அவர் அனுமதி வாங்கித்தந்த நேரத்திற்கு படப்பிடிப்பை முடிக்க வேண்டுமானால், யாரும் தூங்கக்கூடாது, தூங்கவும் விடக்கூடாது என்று அனைவரும் கஷ்டப்பட்டு படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. உதய்குமார் ஒளிப்பதிவை கவனித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலை வாங்கி தருவதாக கூறி அக்காள்–தங்கை துபாயில் விற்பனை: புரோக்கர்கள் 2 பேர் கைது!!
Next post பெண்களின் பாதுகாப்புக்காக 100 ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: ரெயில்வே இணை மந்திரி!!