திருமங்கலம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது!!
Read Time:1 Minute, 5 Second
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடகரைபுதூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் அனிதா (வயது16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
அனிதாவை, அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா (21) என்ற வாலிபர் காதலித்து வந்தார். 10 நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து வடகரை புதூர் கிராம நிர்வாக அதிகாரி ராமமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. அவர், திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்ததாக வாலிபர் ராஜாவை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Average Rating