புலிகளின் அரசியல் பொறுப்பாளருக்கும் கடற்புலிப் பொறுப்பாளருக்குமிடையில் முறுகல்!!
Read Time:1 Minute, 7 Second
புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கும், கடற்படைத்தளபதி சூசைக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றுமுன்தினம் கிளிநொச்சியில் பிரதேச பொறுப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தமிழ்ச்செல்வனுக்கும் சூசைக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் கொண்ட தளபதி சூசை தனது கைத்துப்பாகியை எடுத்து வானத்தை நோக்கிச்சுட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்குமிடையில் கடந்த காலங்களில் முரன்பாடுகள் இடம்பெற்று, பின்னர் தலைமையினால் தீர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.