மதம் மாற்ற விவகாரம்: ஆக்ராவில் முக்கிய குற்றவாளி கைது!!
Read Time:1 Minute, 19 Second
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கடந்த 7-ந் தேதி, 57 முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையில் புகாரின்பேரில் ஆக்ரா போலீசார், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும் தர்ம ஜக்ரிதி மஞ்ச் அமைப்பின் நிர்வாகியுமான நந்தகிஷோர் வால்மீகியை தேடி வந்தனர். அவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.12 ஆயிரம் பரிசும் அறிவிக்கப்பட்டது.
போலீசார் ஏற்கனவே வால்மீகியின் மகன் ராகுல் உள்பட 2 பேரை பிடித்தனர். தொடர்ந்து நடந்த வேட்டையில் வால்மீகி நேற்று சிக்கினார். விசாரணையில் குண்டர் சட்டத்தில் கைதான அவர் தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளார் என்பது தெரியவந்தது. மத மாற்ற வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating