6-ம் வகுப்பு மாணவி கொலை: கடைகள் அடைப்பு- பள்ளிக்கு விடுமுறை!!

Read Time:1 Minute, 46 Second

c1597f17-03ff-4a12-8e2a-0a64a3816112_S_secvpfமாணவி கொலையை கண்டித்து இன்று பொதுமக்கள் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.வி.குப்பத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சில மாணவர்கள் சாலையில் சைக்கிளை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், இது குறித்து சம்பவ இடத்துக்கு வராமல் எந்த நடவடிக்கையும் எடுக்காத கலெக்டரை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு அமைப்பினர் கே.வி.குப்பத்தில் போராட்டம் – மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் டி.எஸ்.பி. விஜயகுமார், தாசில்தார் மணி பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட 6–ம் வகுப்பு மாணவி கீர்த்திகா பயின்ற மாச்சனூர் அரசு மேல்நிலை பள்ளியில் இன்று மாணவிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே போல் கே.வி.குப்பத்தில் உள்ள மேலும் 2 பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.

நாளை வழக்கம் போல பள்ளி திறக்கப்படும் என்னு கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க பொது சுகாதார சேவை மைய முதன்மை மருத்துவராக பதவியேற்கும் முதல் இந்திய மருத்துவர்!!
Next post பண்டார நாயக்க வம்சத்திற்கும், ராஜபக்ச வம்சத்திற்கும் இடையிலான போட்டி:– தமிழ் மக்கள் பார்வையாளர்களா? – நிலாந்தன் (சிறப்பு கட்டுரை)!!