சிவகங்கை அருகே 2 வீடுகளில் 23 பவுன் நகைகள் கொள்ளை: அண்ணன்–தம்பி கைது!!

Read Time:1 Minute, 38 Second

7a6a1d3c-dc5a-4fc0-941f-d35c976439aa_S_secvpfசிவகங்கை அருகே கொழுக்கட்டைபட்டியை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ராணி (வயது27). இவர் கடந்த செப்டம்பர் 19–ந்தேதியன்று வங்கிக்கு சென்று திரும்பும் போது, வீட்டில் இருந்த மூதாட்டி கலை (70) மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் நீண்ட நாட்கள் இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை திறந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 6½ பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.

இது குறித்து சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகங்கை அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த கருப்பையா மகன் சுப்பிரமணி (44). இவரது வீட்டில் இருந்த ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 16 பவுன் நகைகளை யாரோ திருடி சென்றுவிட்டனர்.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சிவகங்கை போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த ராமன் மகன்கள் கமலஹாசன் (22), பழனி (19) ஆகியோரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்த குழந்தையின் இதயத்தை தானம் தந்த பெங்களூர் பெற்றோர்: தானம் பெற்ற சென்னை பெற்றோர்!!
Next post திருட வந்தபோது வங்கி அதிகாரி வீட்டில் உணவு சாப்பிட்ட கொள்ளையர்கள்!!