திருட வந்தபோது வங்கி அதிகாரி வீட்டில் உணவு சாப்பிட்ட கொள்ளையர்கள்!!

Read Time:1 Minute, 21 Second

2e95aa21-267a-4093-a391-0dc317238fbb_S_secvpfமதுரை அண்ணா நகர் 2–வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது67) வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரவில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் விலை உயர்ந்த லேப்–டாப் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்தனர்.

அதன் பின்பு அவர்கள் சமையல் அறையில் புகுந்து ரொட்டி, பழம், பிஸ்கட் போன்றவற்றையும் சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாய் மங்கை வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் அப்பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் வரை ஓடி நின்றது.

அதேபோன்று அண்ணா நகர் எல்.ஐ.ஜி. காலனி பகுதியில் உள்ள செந்தில்குமார் என்பவரது உறவினர் வீட்டிலும், கதவின் பூட்டை உடைத்து திருட முயற்சித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகவும், அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகங்கை அருகே 2 வீடுகளில் 23 பவுன் நகைகள் கொள்ளை: அண்ணன்–தம்பி கைது!!
Next post வேறு நபருடன் பழகியதால் காதலியை வெட்டிக் கொலை செய்த பெயிண்டர் கைது!!