வேறு நபருடன் பழகியதால் காதலியை வெட்டிக் கொலை செய்த பெயிண்டர் கைது!!

Read Time:3 Minute, 57 Second

f9445682-8bcc-4448-9dbb-97777b86f1e5_S_secvpfகேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணத்தூரில் உள்ள உதயம் பேரூரை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி புஷ்பா. இருவரும் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு 4 வயது சிறுமி நீதுவை தத்தெடுத்தனர். தற்போது நீதுவுக்கு 17 வயதாகிறது.

இவர்களது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் பினுராஜ் (31). பெயிண்டராக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்கு தெரியாமல் நீதுவும், பினுராஜும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்தது. இருவருக்கும் இடையே 18 வயது வித்தியாசம் உள்ளதாலும், நீது மைனர் பெண்ணாக இருப்பதாலும் இந்த காதலுக்கு பெண் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கும் அழைத்து விசாரித்தனர். அப்போது நீதுவுக்கு 17 வயதே ஆவதால் அவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. 18 வயது ஆன பின்னர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து நீதுவை அவரது பெற்றோர் அழைத்து சென்று விட்டனர். நீது அவரது உறவினர் வீட்டில் தங்கி பியூட்டி பார்லருக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தந்தை பாபுவின் வீட்டுக்கு வந்த நீது வீட்டின் மாடியில் துணி துவைத்துக் காய வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த பினுராஜ் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் நீதுவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் நீது கீழே சரிந்து இறந்தார். சத்தம் கேட்டு நீதுவின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் பினுராஜ் நான் நீதுவை கொலை செய்து விட்டேன். புகார் தெரிவிக்க விரும்பினால் போலீசிடம் தெரிவியுங்கள் என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இதுகுறித்து உதயம் பேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் உதவி போலீஸ் கமிஷனர் பிஜூ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நீதுவை கொலை செய்த பினுராஜை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பினுராஜ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் நீது கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் என்னை மறந்து கடந்த 1 மாதமாக வேறு நபருடன் பழகி வருவது எனக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்து அவரை வெட்டி கொலை செய்தேன் என்றார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருட வந்தபோது வங்கி அதிகாரி வீட்டில் உணவு சாப்பிட்ட கொள்ளையர்கள்!!
Next post என் குழந்தைகள் ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் போராளிகள்: பெருமையடித்து கொண்ட தாய் சிறையிலடைப்பு (வீடியோ இணைப்பு)!!