ராஜஸ்தானில் சென்னை வாலிபர்களிடம் மீது துப்பாக்கிச் சூடு: ரூ.25 ஆயிரம் கொள்ளை!!
சென்னையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 4 பேர் தொழில் விஷயமாக டெல்லிக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஜெய்ப்பூருக்கு காரில் சென்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஷாபுரா பகுதியில் கட்டோலியா என்ற பாலம் அருகில் இவர்கள் சென்றுக்கொண்டிருந்த போது, பின்னால் கார் ஒன்று வேகமாக பின் தொடர்ந்து வந்தது. அதிலும் 4 பேர் இருந்தனர்.
அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டதால், சென்னையை சேர்ந்தவர்களை அழைத்துச்சென்ற கார் டிரைவர் ஜிதேந்திராவும் வேகமாக காரை ஓட்டினார்.
காரை பின் தொடர்ந்தவர்களும் மின்னல் வேகத்தில் துரத்திச்சென்றனர். அப்போது காரில் இருந்தவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் நிலை குலைந்த சென்னை வாலிபர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். சூப்பாக்கிச்சூட்டில் டிரைவர் ஜிதேந்திராவின் கையில் குண்டு பாய்ந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவர் காரை நிறுத்தினார்.
இதையடுத்து காரில் இருந்து துப்பாக்கியுடன் இறங்கிய 4 பேரும், சென்னையை சேர்ந்தவர்களை பார்த்து சத்தம் போடக்கூடாது என்று மிரட்டினர்.
டிரைவர் ஜிதேந்திராவின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய கொள்ளையர்கள் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணம், கேமரா, ஐ போன் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஷாவுரா போலீசார் விரைந்து சென்று டிரைவர் ஜிதேந்திராவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கொள்ளையர்கள் முகத்தையெல்லாம் மூடாமல் சர்வ சாதாரணமாக வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating