ஒரே வீட்டில் கொன்று குவிக்கப்பட்ட 8 குழந்தைகள்! அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)!!
அவுஸ்திரேலியாவில் ஒரே வீட்டில் இருந்த 8 குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 8 குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்துள்ளனர்.
இந்த குழந்தைகளின் அருகில் பெண் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இவர் குழந்தைகளின் தாயார்(34) என கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பெண்ணின் வீட்டிற்கு தனது சகோதரரோடு சென்ற அவரது உறவினர் லிசா(lisa), இச்சம்பவத்தை பார்த்ததும் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், அந்த குழந்தைகளை மிக பாதுகாப்போடு அப்பெண் வளர்த்து வந்தார் என்றும், அந்த குழந்தைகளும் தாயாரிடம் அன்போடு இருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட குழந்தைகள் 18 மாதம் முதல் 15 வயது வரை உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் என்ன காரணத்திற்காக யார் கொலை செய்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. தற்போது கொலையாளியை தேடி பிடிக்கும் முயற்சியில் பொலிசார் மும்முரமாய் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating