மாத்தி யோசிச்ச ஆந்திர மாணவி: திருமணம் செய்ய மறுத்த விரிவுரையாளரின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்!!
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுஜன்யா என்ற பெண் இங்குள்ள நரசராவ்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு கல்லூரியில் இளங்கலை பயின்று வந்தார். அப்போது, அவருக்கும் அதே கல்லூரியில் விரிவுரையாளராக பனியாற்றிய வெங்கடரமணா என்பவருக்கும் நட்பு அரும்பியது.
நட்பு மலர்ந்து காதலாக மாறி, மணம் வீசத் தொடங்கிய வேளையில் சவுஜன்யாவின் கல்லூரிக் காலம் முடிந்து விட்டது. முதுகலை கணிதம் பயில்வதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் அவர் சேர வேண்டியதாகி விட்டது.
எனினும், விசாகப்பட்டினத்தில் இருந்தபடியே விரிவுரையாளர் வெங்கடரமணாவுடனான தனது காதலை சவுஜன்யா வளர்த்துக் கொண்டு வந்துள்ளார். இதற்கிடையில், பழைய கல்லூரியில் செய்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்ட வெங்கடரமணா, அதே மாவட்டத்தில் உள்ள நல்லப்பாடு பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது விரிவுரையாளராக வேலை செய்து வருகிறார்.
சவுஜன்யாவின் காதலை மறந்தும் மறுத்தும் விட்ட வெங்கடரமணா, கடந்த ஆண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் உணவு இடைவேளயின்போது வெங்கடரமணா கல்லூரியை விட்டு வெளியே வந்தார். வாசலின் வெளியே அவரது வருகைக்காக ’புர்க்கா’ அணிந்த ஒரு உருவம் வழிமேல் விழிவைத்து காத்திருந்தது.
வாசல் கேட்டை விட்டு வெளியே வந்ததும் தனது கையில் வைத்திருந்த மர்மப் பொருளை வெங்கடரமணா மீது அந்த புர்க்கா உருவம் வீசியது. முகத்தை கைகளால் மூடிக்கொண்டு வெங்கடரமணா அலறத் தொடங்கினார். அவ்வழியே சென்ற சிலர் அந்த உருவத்தை பிடித்து, புர்க்காவை நீக்கி முகத்தைப் பார்த்து திகைத்துப் போயினர்.
விரிவுரையாளர் வெங்கடரமணாவை உயிருக்குயிராக காதலித்த சவுஜன்யா, கையில் ஆசிட் பாட்டிலுடன் புர்க்கா பெண்ணாக நின்றிருந்தாள். வெங்கடரமணா மீது வீசிய ஆசிட்டின் சில துளிகள் அவரது முகத்திலும் தெறித்திருந்தது.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating