நாங்குநேரி அருகே திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை!!
Read Time:1 Minute, 13 Second
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரன்குடி தெற்குத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26). இவருக்கும் தண்டையார்குளத்தை சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுக்கும் கடந்த 10–ந்தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அய்யப்பன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. திருமணம் பிடிக்காததால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating