மனைவி விவாகரத்து கேட்டதால் லாரி டிரைவர் கிணற்றில் குதித்து தற்கொலை!!

Read Time:1 Minute, 47 Second

3dff39f6-477f-49f5-9992-3058c5c5419a_S_secvpfசெங்குன்றம் எம்.ஏ.நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (32). லாரி டிரைவர். இவரது மனைவி மதுமதி. இவர்களுக்கு 5 வயதில் கண்மணி என்ற மகள் உள்ளார்.

ஆனந்தனுக்கும் மதுமதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அப்போது மதுமதி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விடுவார். பின்னர் திரும்பி விடுவார்.

இதைப் போல் கடந்த 3 வருடம் முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு மதுமதி தாய் வீட்டிற்கு சென்றார். அவரை கூப்பிட ஆனந்தன் சென்றார்.

அப்போது மதுமதி இனி உங்களுடன் வாழ முடியாது. நான் உங்களை விவாகரத்து செய்ய போகிறேன் என்று கூறினார்.

இதனால் மனவேதனை அடைந்த ஆனந்தன் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார். கடந்த 18–ந்தேதி வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது வீட்டில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. ஆனந்தன் வேலைக்கு சென்று விட்டதாகவே நினைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஆனந்தனின் வீட்டு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்தது. கிணற்றை எட்டி பார்த்த போது ஆனந்தன் அழுகிய நிலையில் பிணமாக மிதந்தார். அவரது பிணத்தை மீட்டு செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடன கிளப்பில் இளம்பெண்ணுடன் ஆட்டம் போட்ட அம்பரீஷுக்கு எதிர்ப்பு!!
Next post காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!