காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

Read Time:1 Minute, 20 Second

e58aa5ce-dd68-4e69-9ee3-fae0cddf4cac_S_secvpfதிருவள்ளூர் புதுமா விளங்கை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் நர்மதா (23). இவர் கடந்த 12–ந் தேதி கடைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நர்மதாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கடம்பத்தூர் போலீசில் நர்மதா தனது காதல் கணவர் அன்பரசனுடன் தஞ்சம் புகுந்தார்.

விசாரணையில் நர்மதாவுக்கும் திருப்பூரை சேர்ந்த அன்பரசனுக்கும் (27) போன் மிஸ்டு கால் மூலம் காதல் மலர்ந்து உள்ளது. அந்த காதலுக்கு நர்மதா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நர்மதா வீட்டை விட்டு வெளியேறி அன்பரசனை திருமணம் செய்தது தெரிய வந்தது. போலீஸ் தேடுவதை அறிந்து இங்கு வந்தாகவும் தன்னை கணவர் அன்பரசனுடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். இதை தொடர்ந்து போலீசார் நர்மதாவை அன்பரசனுடன் அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி விவாகரத்து கேட்டதால் லாரி டிரைவர் கிணற்றில் குதித்து தற்கொலை!!
Next post 20 வயது காதலி முகத்தில் ஆசிட் வீசிய 80 வயது காதலன்!!