தேனியில் கலெக்டர் அலுவலக ஊழியர் மகளை கற்பழித்த மந்திரவாதி!!

Read Time:1 Minute, 52 Second

fc93ea4d-35bb-41f0-8612-75062e71a691_S_secvpfதேனி அல்லிநகரம் போலீஸ் சரகம் மீறுகண்மாய் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி நவநீதா. இவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது மகள் மாலா(வயது 12 பெயர் மாற்றப்பட்டு உள்ளது.) தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகுமார் இறந்தார். அதன்பின்னர் நவநீதா மகளுடன் தனியாக வசித்து வருகிறார். நவநீதா அடிக்கடி பழனி அருகே மடத்துக்குளத்தில் உள்ள மந்திரவாதி குமார் (32) என்பவரிடம் குறி கேட்க செல்வார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மந்திரவாதி குமார் தேனியில் உள்ள நவநீதா வீட்டுக்கு தாயத்துடன் வந்தார். அப்போது மாணவி மாலா மட்டும் இருந்தார். அவரை வசியம் செய்ததோடு நைசாக பேசி கற்பழித்தார்.

அதிர்ச்சி அடைந்த மாலா கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த மந்திரவாதி குமார் அங்கிருந்து ஓடிவிட்டார்.

தகவல் அறிந்து நவநீதா வீட்டுக்கு விரைந்து வந்தார். தனது மகளுக்கு நடந்ததை கேள்விப்பட்டு பதறிபோனார்.

இதுகுறித்து நவநீதா அல்லிநகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி குமாரை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு!!
Next post தேவயானி கோப்ரகடே மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை: காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார்!!