ரெயிலின் முன் பாய்ந்து சிறுவன்-சிறுமி காதல் ஜோடி தற்கொலை!!
ஒடிசா மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு சிறுவனும் சிறுமியும் சரக்கு ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள பைட்டாரானி ரோடு ரெயில் நிலையத்தின் அருகேயுள்ள ஓசாலா என்ற இடத்தின் வழியாக வந்த சரக்கு ரெயிலின் குறுக்கே நேற்று பாய்ந்த இந்த இளம் காதல் ஜோடிகள் தண்டவாளத்தின் ஓரத்தில் பிணங்களாக கிடந்தனர்.
அந்த சிறுவனின் பாக்கெட்டில் இருந்த ஒரு கடிதத்தை ரெயில்வே போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட இந்த இடத்துக்கு வரும்படி தனது காதலிக்கு அந்த சிறுவன் எழுதியுள்ளதாக கூறப்படுகின்றது.
பலியான இந்த ஜோடியின் பெயர் விபரங்கள் ஏதும் தெரியவில்லை. பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
Average Rating