அரசு ஆஸ்பத்திரியில் நர்சுக்கு கத்திக் குத்து: கணவர் தப்பி ஓட்டம்!!

Read Time:1 Minute, 28 Second

ee54ab89-8a79-4a0f-90be-2f7d24f29f18_S_secvpfகோவை உப்பிலிபாளையம் மெயின் ரோடு வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்திரா (வயது 45). இவர் ராஜ வீதியில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளார். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவுப்பணியில் ஆஸ்பத்திரியில் சந்திரா வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சண்முகம் குடிபோதையில் வந்தார். அவர் மனைவி சந்திராவிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் கணவன் – மனைவிக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சண்முகம் தயாராக கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து சந்திராவை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சந்திரா கீழே சரிந்தார். அங்கிருந்து சண்முகம் தப்பியோடினார். அக்கம்பக்கத்தினர் சந்திராவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வெறைட்டிஹால்ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரம பெண் கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது!!
Next post டெல்லியில் பிறந்த நாளன்று பர்த்டே பார்ட்டிக்கு அழைத்து பெண் பாலியல் பலாத்காரம்: இருவர் கைது!!